ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Monday, July 30, 2007

மர்மக் கடிதத்தில்,
"கடற்கரைக்கு வாருங்கள்"
--உன் அன்புக்காதலி என்று...
ஆனந்தத்தில் நான்....
நால்வரில் எவளோ என்று.....

*********

முப்பது வரிகள்
மூன்று வரி ஹைக்கூவானது.
இடம் போதாமையால்...


*********

புது சமையலறை
வாஸ்து வியாதி...
மறந்தார்போல எப்போதேனும்
பழைய அறைக்கே செல்வேன்...
எனைப்போலவே
வந்து வந்து முட்டி நிற்கும்
பழைய சமயலறை எலிகளும்...

2 Comments:

  • //மர்மக் கடிதத்தில்,
    "கடற்கரைக்கு வாருங்கள்"
    --உன் அன்புக்காதலி என்று...
    ஆனந்தத்தில் நான்....
    நால்வரில் எவளோ என்று.....//

    உங்களை பாக்கும் போதே நெனச்சேன்.. 4 பொண்டாட்டி கட்டின மாதிரி தான் இருக்கிங்க :P

    By Blogger Sanjai Gandhi, At 7:52 AM  

  • மிகவும் அழகாக ஆழமான அர்த்தங்களுடன்

    By Blogger Bagavathy, At 10:22 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home