Friday, August 31, 2007

"சதுரங்க வாழ்க்கை"

யானையை வெட்டி..
குதிரையைக் கொன்று..
ராணியைக் களவாடி..
ராஜாவை அலைக்கழித்து....
நானே வெல்ல
நான் மட்டுமே இருபுறமுமாய்...

*******

ஒன்பது வருடமாய் காத்திருக்கிறேன்
உனைப்போலவே...
என்றாவது ஈனுவேன்...
புத்தக மயிலிறகிடம்
பிள்ளையில்லாத தாய்...

Thursday, August 09, 2007

உறவின் மனதுகளில்
பிரிந்த வரவேற்பு
சென்று சேர்ந்தது
மிதியடியின் மேலே....

*********

விரைவாய்த்தான்
முடிகிறது
பல காதல்கள்
விரைவு வண்டியில்....

*********


வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
இறந்த பின்னே
இறைவன் அனுப்பினான்
சிங்களவனாக...?!

Monday, July 30, 2007

மர்மக் கடிதத்தில்,
"கடற்கரைக்கு வாருங்கள்"
--உன் அன்புக்காதலி என்று...
ஆனந்தத்தில் நான்....
நால்வரில் எவளோ என்று.....

*********

முப்பது வரிகள்
மூன்று வரி ஹைக்கூவானது.
இடம் போதாமையால்...


*********

புது சமையலறை
வாஸ்து வியாதி...
மறந்தார்போல எப்போதேனும்
பழைய அறைக்கே செல்வேன்...
எனைப்போலவே
வந்து வந்து முட்டி நிற்கும்
பழைய சமயலறை எலிகளும்...

Thursday, July 26, 2007

சுற்று முற்றும் பார்த்து
கல் குத்தாத இடமாக பார்த்து, படுத்துக்கொண்ட நேரத்தில்
கேட்கிறது எங்கோ...என்னை விம்ம வைக்கும் பாடல்
"விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே....
.......உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்..."
கடக்....கடக்....கடக்....
முதல் பெட்டியிலேயே மூன்று துண்டானேன்....

Monday, January 08, 2007

*கனவுகள்....பரவாயில்லை*


தூக்கம் வராத இரவு

நினைவுகளின்பால் கனவு கண்டேன்

கனவுகளில் நினைவை மறந்த

நிஜமான கனவுகளில்

காதலுக்கும், உறவுகளுக்கும், வேலைகளுக்கும்

பயங்களுக்கும், கற்பனைகளுக்குமாய்....மோதல்கள்

காதலி என் ஆறாம் வகுப்பு நண்பனுடன்

தூக்கிலடப்படும் கைதியாய் நான்

எரியும் நெருப்பிலிருந்து என் இறந்த தாய்

மனதின் குரூரங்கள் காட்சியாய்

இத்தனையும் ஒரே இரவுக் கனவுகளில்

விக்கித்தே முழிக்கும் பெரும்பாலும் என் பகல்கள்

கனவுதானே 'கழுதை கிடக்குது' என்றபடி

கனவுகளை மறந்து கடக்க கவனமாகும்

மூன்று விளக்குகள் உத்தரவிடும்

முச்சந்தியில் வந்து நின்றேன்...

வேடிக்கையாய் பார்த்த ஒரு விரைந்த வண்டியில்....காதலி

என் ஆறாம் வகுப்பு நண்பனுடன்.....

Thursday, January 04, 2007

*ஒரே ஒரு முறை.....காதல்*

அடுத்த வீட்டு குழந்தை அஞ்சியதற்காய்
என் ஆறுமாத சோகத்தை ஒழித்துவிட்டு
விட்ட பாடங்களை மவுனமாய் படிக்க
தவறுதலாய் அவள் பெயரையே உச்சரிக்க....
சரி எழுதியாவது தீர்க்கலாமென்றெண்ணி எழுத முயல
தவறுதலாய் அவள் பெயரையே எழுத....
எழுதும் பெயரின் கடைசி எழுத்தில் மாண்ட காதல் மனதில் வர
அவள் பெயரையே மீண்டும் எழுத நினைக்க....
மீண்டும் தவறுதலாய் எழுதுகிறேன்...
'என் உயிர்' என்று..
மறுபடியும் வளர்கிறது தாடி.....

Friday, December 01, 2006

காதல் முற்றுப் பெற்றதாய்
முற்றுப் புள்ளியில் கவிதையை முடித்தேன்
கவிதை முடியா வண்ணம்
வரி ஒன்று நினைவில் வர
கமா வில் ஆரம்பித்தது இரண்டாவது பத்தி
கவிதை மட்டுமல்ல
இப்போது காதல்களும் கூட
கமாக்களில்தான் சேர்ந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கையில்.....