ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Friday, December 01, 2006

என் அழகற்ற உடலை விட்டு
உருவற்ற உயிர் போகும் சமயம்
கனவு கண்டது உயிர்
புதிதாய் பிறந்த பின்
நிலாவிலே வடாம் காயப்போடுவேனா?
காந்தியின் தண்டியாத்திரையில் கலந்திருப்பேனா?
வானளாவிய மிருகங்களின் வாலைப்பிடித்து விளையாடிக் கொண்டிருப்பேனா?
பொன்னியின் செல்வனின் புரவியாய் போயிருப்பேனா?
ஏசுவை சாட்டையால் அடித்துக் கொண்டிருப்பேனா?
எத்தனை முறை இறந்தோம் என்பதை மறந்த உயிர்
தன்னை மறந்து இறைவனிடம் வேண்டியது
கடமைகளைக் கழுவிலேற்றும்
இந்த காதலை மட்டும் என்னுள் கலக்காதிரு....

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home