ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Saturday, November 11, 2006

காகிதங்களில் கவிதைகளை நிரப்பிய நான்
கவிதை சரியில்லாத காகிதத்தையும்
காகிதம் சரியில்லாத கவிதையையும்
கசக்கி எறிந்தேன்...
கசங்கிய கவிதைக் காகிதங்களை
கழுதை ஒன்று தின்று கொண்டிருக்க
காணும் தூரத்தில் நின்ற ஒருவன்
'கவித போதும் கழுத' என்றான்
கழுதையையா? என்னையா?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home