ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Tuesday, November 07, 2006

எங்கேயோ சென்று கொண்டிருந்த
மழை மேகத்தை கையசைத்து
அழைத்துக் கொண்டிருந்தது
நாளை அழியப்போகும்
இந்த நகரத்தின்
இறுதி மரம்.....

"மனம்"

சிறப்பு தரிசனம்
கடவுளிடம் கைகுலுக்கும் தூரம்
முகம் முழுதாய் தெரிந்தாலும்
மனம் முழுதும் கவலைகளுக்கான
உருவமே நிரம்பியிருக்க
கடைக்கோடியில் உள்ளவனின் கண்கள் மட்டும்
காணாத ஏக்கத்தில்
கடவுளை மட்டுமே நினைத்திருக்க...
கர்ப்பக்கிரகத்தில் இருந்தபோதும்
மணி (&money) சத்தங்களை மட்டுமே
எண்ணிக்கொண்டிருக்கிறான்
கடவுள் மட்டும்...இன்று இரவு
களவாடப்படப்போவது தெரியாமல்..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home