ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Tuesday, November 07, 2006

"அடடே..! யார் முதலில் நிறுத்துவது...?"

" நிரம்பி வழியும் பேருந்து நிலையம்
நிற்க இடமில்லா ரயில் பயணம்
நெரிசலில் நசுங்கும் காய்கறி பேரம்...
எங்குமாய் எதிலுமாய்
மனிதர்கள்...மனிதர்கள்....
எப்படியும் ஒரு ஆண்பிள்ளை வேண்டும் என்று
இயன்றவரை முயன்று பார்க்கும் முட்டாள்கள்
இரண்டு இலக்கம் பெற்றுவிட்ட களைப்பில்
இறைவன் செயல் என்று
இறைவனிடமே பொறுப்பை ஒப்படைத்து
இறைவனடி சேரும் பிணங்கள்
ஏதோ ஒரு மோகத்தில் இரண்டை பெற்று
அவன் ஒன்றும் அவள் ஒன்றுமாய் வைத்திருக்கும்
அன்பில்லா தம்பதிகள்
மறைவிடங்கள் தேடி செய்த தவறு வளர
குப்பைத் தொட்டியில் தூங்க விட்டுவிட்டு
தூக்கமில்லாது தூரப்பார்வை பார்க்கும் துர்ப்பாக்கியசாலிகள்
பொதுவாகவே,
இவர்களைனைவரும்
உற்பத்திப் பெருக்கத்திற்காக
உறக்கமின்றித் திரிந்தவர்கள்
உடல் அசைவுகளின் ஆசையை
நிந்தனை செய்வதற்கே சிந்தனை செய்தவர்கள்
உங்கள் உணர்வுகளை கட்டுப் படுத்தி
உலக மக்கள் தொகையையும் கட்டுப்படுத்துங்கள் "
என்று அவன் எழுதிக்கொண்டிருக்க
கடனுக்கு வாங்கிய காபியோடு
கையில் ஒன்றும் வயிற்றில் ஒன்றுமாய்
அவன் துணை வர
முதல் இரண்டும் முடியைப் பிடித்து
விளையாடிக்கொண்டிருந்தது...
அவன் "ஹே! ... யாரது..? என் வீட்டை எட்டிப்பார்ப்பது?
என்று என்னைப் பார்த்து கத்துகிறான்....!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home