ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Tuesday, November 07, 2006

அதே போல்தான் இப்போதும் அமர்ந்திருக்கிறாய்
தலை குனிந்து மவுனமாய்,
விரலினால் மணலை கிழித்துக்கொண்டு..
நீ அப்போதும் குழப்பத்தில்தானிருந்திருக்கிறாய்
இப்போதும்.........
என் உணர்வுகள்தான் மாறிக்கிடக்கிறது.
மவுனங்களை தப்பாகப்
புரிந்து கொண்டதன் விளைவு
காதலுக்கு "முற்றும்" தருவாயில்
உன் மவுனம் புரிகிறது
காதலை முடிக்கையிலாவது
வார்த்தை பேசு...
இருக்கும் வரை சரி
நீ சென்ற பிறகு வரும்
மவுனத்தின் மோதல்களை தாங்க இயலாது
ஒன்றை மட்டும் புரிந்து கொள்
நீ இறுதியில் பறித்தது காதலலை மட்டுமல்ல
என் காதலன் எனும் தகுதியையும்தான்......

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home