ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Monday, October 30, 2006

கருத்தறியும் கூட்டத்தில்...
காதல்தான் பெரியது
காதலிப்பதாய் நடிப்பவன் கூற்று
அன்னை அன்புதான் பெரியது
தாயில்லாதவன் கூற்று
தூக்கம்தான் பெரியது
உறக்கமில்லாதவன் கூற்று
பூதம்தான் பெரியது
புன்னகைக்கும் குழந்தைகள் கூற்று
பணம்தான் பெரியது
வெறுமையோடு வாழ்பவன் கூற்று
புத்திதான் பெரியது
பக்தியில்லாதவன் கூற்று
உணவுதான் பெரியது
பசித்தவன் கூற்று
கூற்றுக்கள் பொய்யென்றேன்
மாற்று கருத்து...?
மனித மனத்தின் கொடிய குணமே
பெரியது என்றேன்...
கூற்றுகள் கலைந்தன, தோற்றதாய்.......

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home